Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடன் பெற்றவர் இறந்தவரின் வீட்டு ஆவணங்கள் ஒப்படைத்த வீட்டு வசதி சங்கம்

பிப்ரவரி 18, 2023 02:34

குமாரபாளையம் : குமாரபாளையத்தில் கடன் பெற்றவர் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் பெற்று, வீட்டு வசதி சங்கத்தினர் வீட்டு ஆவணங்களை வாரிசுதாரர்களிடம் ஒப்படைத்தனர்.


குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் குமாரபாளையம் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் 4 லட்சத்து 44 ஆயிரம் கடன் பெற்றார்.

இவர் உடல்நலமின்றி 2022, நவ. 4ல் இறந்தார். இவரது கடன் தொகைக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறப்பட்டு, இறந்தவரின் வாரிசுகளான அம்மா மாரியம்மாள், அக்கா சாந்தகுமாரி, மனைவி சுசித்ரா ஆகியோரிடம்  வீட்டு பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சங்க தலைவர் ரவி மற்றும் செயலர் ரவீந்திரன் ஆகியோர் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்